2013-12-16 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
திவிநெகும தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்தின் V ஆம் கட்டத்திற்காக பழக்கன்றுகளை கொள்வனவு செய்தல் - மரக்கறி மற்றும் பழவகைகளில் நாடு தன்னிறைவடையச் செய்வித்தல், இதன்மூலம் உணவு மற்றும் பழவகை இறக்குமதியை குறைத்துக் கொள்ளல், மக்களின் உணவு மற்றும் போசாக்கினை உறுதி செய்து பயனுள்ள பொருளாதார அலகுகளாக வீட்டுத்தோட்டங்களை அபிவிருத்தி செய்யும் நோக்கில் ஏற்கனவே நடைமுறையிலுள்ள திவிநெகும தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தின் V ஆம் கட்டத்தின் கீழ் மரக்கறி விதைகளையும் பழக்கன்றுகளையும் விநியோகிப்பதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சித்திட்டத்திற்குத் தேவையான கன்றுகள் கமத்தொழில் திணைக்களத்தின் நாற்று மேடைகளிலிருந்தும் இந்த திணைக்களத்தின் கீழ் பதிவு செய்யப்பட்டுள்ள நாற்று மேடைகளிலிருந்தும் கொள்வனவு செய்வதற்கும் இதற்குரியதான தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்குமாக கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது |