• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-11-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஜேர்மன் பெடரல் குடியரசிடமிருந்து கிடைக்கும் மானியத்தின் மூலம் வடமாகாணத்தில் வாழ்க்கைத்தொழில் பயிற்சி நிலையமொன்றைத் தாபித்தல்
- ஜேர்மன் பெடரல் குடியரசிடமிருந்து கிடைக்கும் மானியத்தின் மூலம் தேவையான வசதிகளுடன் வாழ்க்கைத்தொழில் பயிற்சி நிலையமொன்று கிளிநொச்சியில் தாபிப்பதற்கும் இதன் தொடர் நடவடிக்கைகள் 2015 ஆம் ஆண்டு முடிவுறுத்தப்படவும் உள்ளது. 200 புதிய ஆட்சேர்ப்புகளையும் உள்ளடக்கிய குறுகியகால மற்றும் நீண்டகால பயிற்சி பாடநெறிகளை நடாத்துவதற்குள்ள ஆற்றல் பிரேரிக்கப்பட்டுள்ள வாழ்க்கைத்தொழில் பயிற்சி நிலையத்திடம் உள்ளது. கிளிநொச்சியில் தாபிக்கப்படவுள்ள இந்த வாழ்க்கைத்தொழில் பயிற்சி நிலையத்திற்கு முல்லைத்தீவு, யாழ்ப்பாணம், கிளிநொச்சி, வவுனியா மற்றும் மன்னார் மாவட்டங்களில் தாபிக்கப்படுகின்ற 08 உப நிலையங்களுக்கு 4.4 யூரோ மில்லியன் ரூபாவை மேலதிக மானியமாக வழங்குவதன் மூலம் இந்த கருத்திட்டத்திற்கு வழங்கப்படுகின்ற நிதிப்பங்களிப்பை அதிகரிப்பதற்கு ஜேர்மன் அரசாங்கம் ஒத்துக் கொண்டுள்ளது. இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சினால் உரிய நேர்வரிசை அமைச்சுக்களுடனும் நிறுவனங்களுடனும் நெருங்கிய ஒத்துழைப்புடன் இந்த கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்தப்படவுள்ளது. நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது