2013-10-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
வலயக் கல்வி அலுவலகங்களில் ஆசிரியர்கள் முகம் கொடுக்க நேரிடுகின்ற பிரச்சினைகள் - ஆசிரியர்களின் பிரத்தியேக கோவைகள், சேவையில் உறுதிப்படுத்தல், சம்பளவேற்றங்கள், கடன்வசதிகள், ஓய்வூதியம், லீவு போன்ற விடயங்களை விசேடமாகக் கொண்டு ஆசிரியர்களின் தாபன நடவடிக்கைகள் தொடர்பிலான தேவைகளை நிறைவேற்றிக் கொள்வது சம்பந்தமாக வலயக் கல்வி அலுவலகங்களில் அவர்கள் இன்னோரன்ன பிரச்சினைகளுக்கு ஆளாவது தொடர்பில் தமக்கு அறியக் கிடைத்துள்ளதாக அதிமேதகைய சனாதிபதியினால் அமைச்சரவையின் அமைச்சர்களுக்கும் இந்தக் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்கப்பட்டதன் பேரில் கலந்துகொண்ட முதலமைச்சர்களுக்கும் அறிவித்தார். கலந்துரையாடலுக்குப் பின்னர், வலயக் கல்வி அலுவலகங்களில் இந்தப் பணிகளை முறைப்படுத்துவதற்கும் ஆசிரியர்களின் தேவையை நிறைவேற்றுவதற்கு அர்ப்பணிப்புடனான பதவியினர்களைக் கொண்ட ஆசிரியர்களுக்கு நட்புறவுமிக்க நிறுவனமொன்றாக வலயக் கல்வி அலுவலகங்களை மாற்றுவதற்குத் தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு மாகாண முதலமைச்சர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது. |