• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-10-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வடக்கு நெடுஞ்சாலைகள் இணைப்புக் கருத்திட்டம் - கட்டம் II இற்கான நான்கு (04) ஒப்பந்த பொதிகளை வழங்குதல்
- வடக்கு நெடுஞ்சாலைகள் இணைப்புக் கருத்திட்டத்தின் கீழ் 120 கிலோ மீற்றர் தேசிய நெடுஞ்சாலைகளை புனரமைப்பதற்கும் மேம்படுத்துவதற்குமான செலவுகளை ஈடுசெய்யும் பொருட்டு இலங்கை அரசாங்கம் ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 98 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் கொண்ட கடன் தொகையொன்றை பெற்றுக் கொண்டுள்ளதோடு, இந்த தொகையிலிருந்து ஒருபகுதி -

* மதவாச்சி - மன்னார் - தலைமன்னார் வீதி (A14) - 47.00 கிலோமீற்றரிலிருந்து 62.10 கிலோமீற்றர் வரை;
* மதவாச்சி - மன்னார் - தலைமன்னார் வீதி (A14) - 62.10 கிலோமீற்றரிலிருந்து 76.50 கிலோமீற்றர் வரை;
* யாழ்ப்பாணம் - பண்ணை - ஊர்காவற்றுத்துறை வீதி (AB19) - 0.00 கிலோமீற்றரிலிருந்து 10.00 கிலோமீற்றர் வரை; அத்துடன்
* யாழ்ப்பாணம் - பண்ணை - ஊர்காவற்றுத்துறை வீதி (AB19) - 10.00 கிலோமீற்றரிலிருந்து 20.275 கிலோமீற்றர் வரை;

ஆகிய வீதிகளை புனரமைப்பதற்கும் மேம்படுத்துவதற்குமாக பயன்படுத்தப்படவுள்ளது. நிதி, திட்டமிடல் அமைச்சராகிய அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.