• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-10-31 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஒத்துழைப்பு அடிப்படையில் நீர்வள பாவனையின் மூலம் சமூக அபிவிருத்தியை எய்துதல் பற்றிய சருவதேச மாநாடு - ஆகஸ்ட் 2013
- சமூக அபிவிருத்திக்கான நீர் வள பாவனை தொடர்பிலான சருவதேச மாநாடு அண்மையில் அநுராதபுரத்தில் நடாத்தப்பட்டது. இதில் இந்தியா, பாகிஸ்தான், மாலைதீவு, பூட்டான் போன்ற தெற்காசிய நாடுகளின் பிரதிநிதிகளும் 450 சமூகம்சார் நீர் வழங்கல் அமைப்புகளும் கலந்துகொண்டன. நீர் வழங்கல் தொடர்பிலான அவர்களுடைய அறிவு இந்த வலையத்திற்குள் பயன்படுத்தப்படும் முழுச் செயற்பாடுகள் தொடர்பிலான அனுபவங்களும் பரிமாறிக் கொள்வதற்கும் நீர் வழங்கல் திட்டங்களின் முகாமைத்துவத்தில் ஈடுபட்டுள்ள சமூக அமைப்புகளுக்கிடையில் பரஸ்பர புரிந்துணர்வுவையும் ஒத்துழைப்புபையும் மேம்படுத்திக் கொள்வதன் நோக்கில் சில செயலமர்வுகள் நடாத்தப்பட்டன. நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் மேற்போந்த தகவல்கள் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டன.