• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-10-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
உள்நாட்டு வங்கி நிதியுதவிகளின் மூலம் வீதிப் பகுதிகளின் நவீனமயப்படுத்தலும் மேம்படுத்தலும்
- பின்வரும் வீதிப் பகுதிகளை நவீனமயப்படுத்துவதற்கும் மேம்படுத்துவதற்குமாக ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதோடு, இந்த நோக்கத்திற்காக உள்நாட்டு வங்கிகளுடன் கடன் ஒப்பந்தங்களை செய்து கொள்வதற்கு வீதி அபிவிருத்தி அதிகாரசபைக்கு அதிகாரத்தினை கையளிப்பதற்கு நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புகளுக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.

* நாரம்மல - தங்கொட்டுவ வீதிப் பகுதி (B308) - (16.03 - 45.25 கி.மீ.)
* அம்பேபுஸ்ஸ - குருநாகல் - திருகோணமலை வீதியின் (A6) - அம்பேபுஸ்ஸ - கலேவலை வீதிப் பகுதி (0.00 - 75.11 கி.மீ)
* கடவெலகெதர - வித்திகுளிய வரையிலான 14.00 கிலோமீற்றர் நீளமான வீதிப் பகுதி
* தெதுறுஓயாவிற்கு குறுக்காக கடிகாவயில் இரட்டைப் பாதை பாலமொன்றின் நிருமாணிப்பு; அத்துடன்
* களனிமுல்ல - முல்லேரியாவ - கொஸ்வத்த வீதி - கட்டம் I - 0.00 கிலோமீற்றரிலிருந்து 0.60 கிலோமீற்றர் வரை தூண்களின் மீது நிருமாணிக்கப்படும் நுழைவுப் பாதையொன்றை நிருமாணித்தல்.