2013-10-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அநுராதபுரம் வடக்கு நீர் வழங்கல் கருத்திட்டம் - I ஆம் கட்டத்திற்கான வடிவமைப்பு, நிருமாணிப்பு மேற்பார்வை, முகாமைத்துவ உதவி ஆலோசகர்களை நியமித்தல் - மேற்போந்த நீர் வழங்கல் கருத்திட்டம் யப்பான சருவதேச ஒத்துழைப்புக்கான நிறுவனத்தின் மூலமும் இலங்கை அரசாங்கத்தின் நிதி ஏற்பாட்டின் மீதும் நடைமுறைப்படுத்தப்படுவதோடு, கருத்திட்டத்தின் செலவு 5,166 மில்லியன் யப்பான் யென்களாவதோடு, இலங்கை அரசாங்கத்தின் பங்களிப்பு 2,789 மில்லியன் ரூபாவாகும். இந்தக் கருத்திட்டம் பின்வரும் இரண்டு கட்டங்களைக் கொண்டுள்ளது. கட்டம் I - மதவாச்சி, றம்பவா பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு குடிநீர் வழங்கும் மஹாகனதராவ நீர் வழங்கல் கருத்திட்டம் ; அத்துடன் கட்டம் II - கஹட்டகஸ்திகிலிய, கெபித்திகொல்லாவ, ஹொரவ்பத்தான, பதவிய பிரதேச செயலகப் பிரிவுகளுக்கு குடிநீர் வழங்கும் வாகல்கட நீர் வழங்கல் கருத்திட்டம் அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு கட்டம் I இற்கான மதியுரைச் சேவை வழங்குவதற்கான ஒப்பந்தத்தை கையளிப்பதற்காக நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |