2013-10-24 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
குற்றமொன்றில் பாதிப்புற்றோர்களுக்கும் சாட்சிகளுக்கும் உதவியளித்தல் மற்றும் பாதுகாப்பளித்தல் தொடர்பிலான சட்டமூலம் - உத்தேச சட்டத்தின் மூலம் குற்றவியல் நீதி முறையில் குற்றஞ்சாட்டப்பட்டவர் உரிமைகள், குற்றமொன்றில் பாதிப்புற்றோர்களின் உரிமைகள் மற்றும் அதிகாரபூர்வமான உரிமைகள் அதேபோன்று சாட்சிகளின் உரிமைகள் ஆகியவற்றுக்கிடையில் சமநிலையை ஏற்படுத்தும். இதன் மூலம் செவ்வையான விளக்க விசாரணையொன்றை நடாத்துவதற்கு வசதிகள் ஏற்பாடு செய்யப்படுவதோடு, குற்றமொன்றில் பாதிப்புற்றோர்கள் மற்றும் குற்றஞ்சாட்டப்பட்டவர்கள் ஆகிய இருதரப்பினர்களுக்கும் நியாயமும் வழங்கப்படும். மேற்போந்த விடயம் சம்பந்தமாக நீதி அமைச்சர் மாண்புமிகு ரவூப் ஹக்கீம் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பு பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படுவதற்கு முன்னர் சட்டவாக்கம் பற்றிய அமைச்சரவை உபகுழுவின் சிபாரிசுகளின் பொருட்டு தொடர்புபடுத்துவதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |