2013-10-17 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கேகாலை - றம்புக்கனை பிரதான வீதியின் மாஓயா பாலத்திலிருந்து பின்னவல யானைகள் சரணாலயம் வரையிலான வீதியை அழகுபடுத்தல் - கேகாலை பின்னவலயிலுள்ள யானைகள் சரணாலயத்தை பார்வையிடுவதற்கு செல்லுகின்ற உள்நாட்டு, வெளிநாட்டு உல்லாசப் பயணிகளின் உபயோகத்தின் பொருட்டு மேற்போந்த வீதிப்பகுதியை புனரமைப்பதற்கான தொடர் நடவடிக்கை எடுப்பது தொடர்பில் தாவரவியல் பூங்கா, பொதுப் பொழுதுபோக்கு அமைச்சர் மாண்புமிகு ஜயரத்ன ஹேரத் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |