2013-10-10 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2014 தெயட்டகிருள நிகழ்ச்சித்திட்டம் - நீர் வழங்குகை - 2014 தெயட்டகிருள நிகழ்ச்சித்திட்டத்தில் குருநாகல், புத்தளம், கேகாலை ஆகிய மாவட்டங்கள் உள்வாங்கப்பட்டுள்ளதோடு, கண்காட்சி வயம்ப பல்கலைக்கழகம், குளியாபிட்டிய தொழினுட்பக் கல்லூரி, குளியாபிட்டிய மத்திய மாகா வித்தியாலயம் ஆகியவற்றின் மனையிடங்களில் குளியாபிட்டியவில் நடாத்தப்படவுள்ளது. 2014 தெயட்டகிருள நிகழ்ச்சித்திட்டத்திற்காக குறித்தொதுக்கப்படவுள்ள நிதியங்களைப் பயன்படுத்தி கண்காட்சி மனையிடங்களும் அடங்கலாக வடமேல் மாகாணத்தில் குடிநீர் விநியோகத்தை அபிவிருத்தி செய்வதற்குத் திட்டமிடப்பட்டுள்ளது. பிரேரிக்கப்பட்டுள்ள கருத்திட்டத்தின் மூலம் வயம்ப பல்கலைக்கழகம், குளியாபிட்டிய தொழினுட்பக் கல்லூரி, குளியாபிட்டிய மத்திய மாகா வித்தியாலயம், குளியாபிட்டிய மற்றும் கேகாலை நகரங்கள் மற்றும் இந்த நகரங்களுக்கு அண்மித்த பிரதேசங்களில் வசிக்கும் பொது மக்களுக்கு நேரடி நலன்கள் கிடைக்கும். இதற்குரிய தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |