• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தடைசெய்யப்பட் மருந்துகளின் பயன்படுத்துகையைக் கட்டுப்படுத்துவதற்கும் ஒழுங்குறுத்துவதற்குமான சட்டமூலம்
- 2005 ஒக்ரோபர் மாதத்தில் நடாத்தப்பட்ட ஐக்கிய நாடுகளின் கல்வி, விஞ்ஞான கலாசார அமைப்பின் (யுனெஸ்கோ) பொதுக் கூட்டத்தில் தடைசெய்யப்பட்ட மருந்துகளின் பயன்படுத்துகையைக் கட்டுப்படுத்தும் சருவதேச சமவாயம் அங்கீகரித்துக் கொள்ளப்பட்டதோடு, 2011 மார்ச் மாதத்தில் இலங்கை இந்த சமவாயத்தை ஏற்றுக் கொண்டது. விளையாட்டுகளில் தடைசெய்யப்பட்ட மருந்துகளின் பாவணையை இல்லாதொழிக்கும் நோக்குடன் இவ்வாறு தடைசெய்யப்பட்ட மருந்துகளின் பாவணையை தடைசெய்வதை மேம்படுத்துவது இந்த சமவாயத்தின் நோக்கமாகும். சட்டவாக்கம் பற்றிய அமைச்சரவை உபகுழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ள திருத்தங்களை இயைபுள்ள சட்டமூலத்தில் சேர்த்ததன் பின்னர், இந்த சட்டமூலத்தை அரசாங்க வர்த்தமானியில் பிரசுரிப்பதற்கும் அதன் பின்னர் அங்கீகாரத்தின் பொருட்டு பாராளுமன்றத்தில் சமர்ப்பிப்பதற்கும் விளையாட்டுத்துறை அமைச்சர் மாண்புமிகு மஹிந்தானந்த அளுத்கமகே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.