2013-07-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மாத்தறையிலிருந்து கதிர்காமம் வரை புதிய புகையிரத பாதையொன்றை தாபித்தல் - கட்டம் II, III - மாத்தறையில் இருந்து பெலியத்த வரையிலாள புதிய புகையிரதப் பாதையொன்றை நிருமாணிப்பதற்குரியதாகக் கருத்திட்டத்தின் கட்டம் I இன் தொடர் நடவடிக்கைகளைச் செய்வதற்கு ஏற்கனவே அமைச்சரவையின் அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. கருத்திட்டத்தின் 11 ஆம் கட்டமான பெலியத்தையிலிருந்து கதிர்காமம் வரையிலான புகையிரதப் பாதை, கரையோரத்தின் இயற்கையைப் பாதுகாக்கும் பொருட்டும் மக்கள் சொத்துக்களின் பாலான சேதங்களை மேலும் குறைக்கும் பொருட்டும் கூடியளவு நாட்டின் உட்பகுதியில் நிருமாணிப்பதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதற்கமைவாக, அங்குணகொலபலஸ்ச, வெட்டிய சந்தி, அந்தரவெவ, மத்தள, லுணுகம்வெஹர ஆகிய பிரதேசங்களை தழுவும் விதத்தில் பொருத்தமான இடமொன்றில் அம்பாந்தோட்டை நகரத்தை இணைத்து பெலியத்தையிலிருந்து கதிர்காமம் வரையிலான புதிய புகையிரதப் பாதையை நிருமாணிப்பதற்கான சாத்திய தகவாய்வொன்றையும் சூழல் பாதிப்புப் பற்றிய மதிப்பீடொன்றையும் மேற்கொள்வதற்காக போக்குவரத்து அமைச்சர் மாண்புமிகு குமார வெல்கம அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |