• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-25 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2012/13 பெரும்போகம் மற்றும் 2013 சிறுபோகம் ஆகிய இருபோகங்களிலும் நெல் அறுவடையை கொள்வனவு செய்வதற்கான நிதியை முகாமித்தலும் கொள்வனவு செய்த நெற்தொகையை விற்பனை செய்தலும்
- 2012 / 13 ​பெரும்போகத்தில் மதிப்பிடப்பட்ட நெல் உற்பத்தி சுமார் 2.72 மெற்றிக் தொன்களாவதோடு, இந்த போகத்தின் நெல் உற்பத்தியானது மன்னார் மற்றும் வவுனியா மாவட்டங்களில் 10 சதவீதத்தாலும் அம்பாந்தோட்டை மாவட்டத்தில் 42 சதவீதத்தாலும் குருநாகல் மாவட்டத்தில் 55 சதவீதத்தாலும் அதிகரித்துள்ளது. நெல் கொள்வனவு செய்வதற்காக இயைபுள்ள மாவட்டங்களின் மாவட்ட செயலாளர்களுக்கு 899 மில்லியன் ரூபாவைக் கொண்ட முற்பணம் விடுவிக்கப்பட்டுள்ளதோடு, 2013 யூன் மாதம் 30 ஆம் திகதியன்றுக்கு கொள்வனவு செய்யப்பட்டுள்ள நெல்லின் அளவு சுமார் 22,705 மெற்றிக் தொன்களாகும். 2013 சிறுபோகத்தில் நெல் அறுவடை 2013 யூலை மாத இறுதியளவில் ஆரம்பிக்கப்படவுள்ளதோடு, 2013 பெரும்போகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்காக அரசாங்க வங்கிகளினூடாக நெல் சந்தைப்படுத்தல் சபைக்கு ஒப்பந்த கடன் வசதிகள் வழங்கப்படவுள்ளன. 2012 ஆம் ஆண்டில் நிலவிய வரட்சியினால் பாதிக்கப்பட்ட இயைபுள்ள மாவட்டங்களில் 2012 சிறுபோகத்தின் நெல் உற்பத்தியுடன் ஒப்பிடும் போது 2013 சிறுபோகத்தில் நெல் உற்பத்தியானது அதிகரிப்பினை காட்டுகின்றமையினால், இது சம்பந்தமாக தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கும் 2013 சிறுபோகத்தில் நெல் கொள்வனவு செய்வதற்காக பொது திறைசேரியின் சுழற்சி நிதியத்திலிருந்து 1,500 மில்லியன் ரூபாவைக் குறித்தொதுக்குவதற்கு திறைசேரி செயலாளருக்கு அதிகாரத்தைக் கையளிப்பதற்கும் நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது