2013-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இரண்டாவது புதிய களனி பாலத்தின் நிருமாணிப்புக்கு அதிசக்தி வாய்ந்த மின் கம்பிகளை தொடர்புபடுத்துதல் - யப்பான் சருவதேச ஒத்துழைப்பு முகவராண்மையின் உதவியுடன் நிருமாணிப்பதற்கு உத்தேசித்துள்ள புதிய களனிப் பாலத்தை நிருமாணிப்பதற்கு முன்னர் புதிய களனிப் பாலம் சார்ந்த வாகனப் போக்குவரத்துக்களை மேம்படுத்துவதற்கு ஆரம்ப ஆய்வொன்று வீதி அபிவிருத்தி அதிகாரசபையினால் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. பிரேரிக்கப் பட்டுள்ள புதிய பாலத்திற்கும் அதனோடிணைந்த வீதி முறைமைக்கும் இடமளிக் கும் பொருட்டு மேலே உள்ள அதிசக்தி வாய்ந்த மின்கம்பிகளை வீதியின் இரு பக்கத்திலும் நிலத்திற்குக் கீழேயான தொடர்புகளாக மாற்றம் செய்ய வேண்டுமென இனங்காணப்பட்டுள்ளது. இந்த அதிசக்தி வாய்ந்த மின்கம்பிகளை பாதையூடாக மாற்றுவது தொடர்பில் தொடர் நடவடிக்கை எடுப்பதற்கு மின்வலு, சக்தி அமைச்சர் மாண்புமிகு (திருமதி) பவித்திரா வன்னிஆரச்சி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |