2013-09-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பதுளை நகரத்தின் சேனாநாயக்க மைதானத்தில் நிலத்துக்கு கீழ் வாகன தரிப்பிடமொன்றைத் நிருமாணித்தல் - பொதுமக்களின் வசதி கருதி பதுளை நகரத்தில் பசுமைப் பூங்காவொன்றையும் நிலத்திற்கு கீழ் வாகனத் தரிப்பிடமொன்றையும் நிருமாணிப்பதற்காக பிரேரிக்கப்பட்டுள்ளது. 2013 ஆம் ஆண்டிற்கான வரவுசெலவுத்திட்ட மதிப்பீட்டின் மூலம் பதுளை மாவட்ட செயலாளருக்கு குறித்தொதுக்கப்பட்டுள்ள 15 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாட்டினைப் பயன்படுத்தி இந்தக் கருத்திட்டத்தின் ஆரம்ப வேலைகளைத் தொடங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தக் கருத்திட்டத்தின் தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு டபிள்யு.டீ.ஜே.செனெவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |