2013-09-19 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கொக்கோ அபிவிருத்திக் கருத்திட்டம் - ஊவா வெல்லஸ்ஸ - 1834 ஆம் ஆண்டில் பிரித்தானியர்களினால் இலங்கையில் கொக்கோவா அறிமுகப்படுத்தப்பட்டது. இலங்கையின் மத்திய மலைநாட்டில் மாத்தளை மற்றும் ஊவா வெல்லஸ்ஸ பிரதேசங்களில் கொக்கோவா செய்கை பண்ணப்பட்டது இறப்பர் மற்றும் தெங்கு செய்கைகளின் துணை பயிர்ச் செய்கையாகவாகும். ஊவா மாகாணத்தில் 5,000 ஹெக்டயர் கொண்ட புதிய இறப்பர் பயிர் செய்கை திட்டமொன்று நடாத்தப்பட்டு வருகின்றதோடு, இந்த நிகழ்ச்சித்திட்டத்தின் மூலம் இதன் துணை பயி ர்செய்கையாக கொக்கோவா செய்கையை ஆரம்பிப்பதற்கு பொருத்தமான சூழல் உருவாகியுள்ளது. மேற்போந்த கருத்திட்டத்தின் நோக்கமாவது இந்த வலயங்களில் சுற்றாடல் சமத்துவத்தை பாதுகாத்து, கிடைக்கக் கூடியதாகவுள்ள காணிகளில் உச்சப் பயனைப் பெற்றுக் கொள்வதோடு, 2020 ஆம் ஆண்டில் கொக்கோவா செய்கையை 3,000 ஹெக்டயர் வரை அதிகரிப்பதற்கும் கொக்கோவா விளைச்சலை 5,500 மெ.தொன் வரை மேம்படுத்துவதற்குமாகும். சிறு ஏற்றுமதிப் பயிர் ஊக்குவிப்பு அமைச்சர் மாண்புமிகு றெஜினோல்ட் குரே அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்பு சம்பந்தமாக பெருந்தோட்டத் தொழில் அமைச்சுடனும் இப்பர் அபிவிருத்தி திணைக்களத்துடனும் மிக நெருக்கமாக அதன் தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |