2013-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
தேசிய தொடரறா கல்விச் சேவையை (NODES) உயர் கல்வி அமைச்சின் பிரிவொன்றாக நடாத்திச் செல்லுதல் - தேசிய தொடரறா கல்விச் சேவை (NODES) மூலம் நாடு பூராவும் உள்ள 26 நிலையங்களில் கணனி வலையமைப்பை அடிப்படையாகக் கொண்டு நடைமுறைப்படுத்தப்படும் தொடரறா கல்வி முறையின் மூலம் 35 கற்கைநெறிகளை கற்பதற்கு உள்நாட்டு வெளிநாட்டு மாணவர்களுக்கு வசதிகள் வழங்கப்பட்டுள்ளன. 2012 ஆம் ஆண்டில் திறந்த பல்கலைக்கழகத்தின் 800 மாணவர்கள் தொடரறா கல்விச் சேவை நிலையத்தின் வசதிகளை பயன்படுத்தியுள்ளனர். அத்துடன், 2012 ஆம் ஆண்டில் அரசாங்கத்தினால் தனியார் நிறுவனங்களுடன் செய்து கொண்ட கூட்டு நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ் தேசிய தொடரறா கல்விச் சேவையிலுள்ள தொழினுட்ப வசதிகளைப் பயன்படுத்திக் கொண்டு அரசாங்க மற்றும் தனியார் துறையைச் சேர்ந்த சுமார் 6,500 ஊழியர்களுக்கு கற்கும் வசதிகள் வழங்குவதற்கான ஆற்றல் உள்ளதுடன், 2013 ஆம் ஆண்டின் இறுதியில் இந்த எண்ணிக்கை 9,000 வரை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. தேசிய தொடராறா கல்விச் சேவைக்குரியதான தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |