2013-09-12 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவம் பற்றிய சருவதேச பயிற்சி நிறுவனத்தை கொத்மலையில் தாபித்தல் - இலங்கை மகாவலி அதிகாரசபையிலும் நீர்ப்பாசனத் திணைக்களத்திலும் ஏனைய அரசாங்க நிறுவனங்களிலும் பொறியியலாளர் பதவியணியில் நிலவும் பற்றாக்குறையை நிவர்த்தி செய்யும் பொருட்டு, 2012 ஆம் ஆண்டில் தாபிக்கப்பட்ட மேற்போந்த நிறுவனத்திற்கு பொறியியல் உதவியாளர்களாவும் தொழினுட்ப உதவியாளர்களாவும் பயிற்றுவிக்கும் பொருட்டு பயிலுநர்களை ஆட்சேர்ப்புச் செய்வதற்காக நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சர் மாண்புமிகு நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |