2013-09-05 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
விசேட கல்வி தேசிய வளங்கள் மற்றும் தகவல்கள் நிலையங்களைத் தாபித்தல் - பாடசாலைகளில் கண்பார்வை குறைந்த, செவிப்புலன் குறைந்த ................ பிள்ளைகள் பின்பற்றப்பட வேண்டிய கற்பித்தல்முறை பொதுவான பிள்ளைகளுக்கு உரித்தான முறைகளிலிருந்து முற்றிலும் சிக்கலானதென்பதுவும் அவர்களது கல்விக்கு விசேட உபகரணங்களையும் வசதிகளையும் அதற்காக விசேடமாகப் பயிற்சி பெற்ற ஆசிரியர்களையும் பயன்படுத்துவது கட்டாயம் என்பதுவும் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது. விசேட தேவைப்பாடுள்ள பிள்ளைகளை இனங்காணும் பொருட்டு 2013-2015 க்கான நடுத்தவணைக்கால வரவுசெலவுத் திட்ட எல்லைக்குள் வழங்குவதற்கு எதிர்பார்க்கப்படுகின்ற நிதி ஏற்பாடுகளில் வள மற்றும் தகவல் நிலையங்களை உருவாக்குவதற்கு கல்வி, சுகாதாரம், சமூக சேவைகள், வாழ்க்கைத்தொழில் மற்றும் ஊடக அமைச்சுக்களுக்கு இடையே சிறந்த ஒருங்கிணைப்புடன் விசேட கல்வி நிகழ்ச்சித் திட்டங்களை நடாத்துவதற்கும் கல்வி அமைச்சர் மாண்புமிகு பந்துல குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |