2013-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
பாதுகாப்புப் படையினரினதும் பொலிஸ் சேவை உறுப்பினர்களினதும் பிள்ளைகளுக்கு குருநாகல் பிரதேசத்தில் பாதுகாப்புச் சேவை கல்லூரியொன்றை நிருமாணித்தல் - முப்படைகளினதும் படையினரினதும் பொலிஸ் சேவை உறுப்பினர்களினதும் பிள்ளைகளுக்கு கல்வி வசதிகளை வழங்குவதற்கு பாதுகாப்புச் சேவைக் கல்லூரியொன்று கொழும்பில் ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ஏற்கனவே இவ்வாறான வசதிகளை நாட்டின் பிரதேசங்களுக்கும் விரிவுபடுத்துவதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளது. குருநாகல் வெவகெதர கனிஷ்ட வித்தியாலயத்தை "குருநாகல் பாதுகாப்புச் சேவைக் கல்லூரி" ஆக மேம்படுத்துவதற்கும் அதற்கு உரியதான தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கும் பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராகிய அதிமேதகைய சனாதிபதி அவர்களினாலும் கல்வி அமைச்சர் மாண்புமிகு பந்துல குணவர்த்தன அவர்களினாலும் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |