2013-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
2014 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியன்று கொண்டாடப்படவுள்ள 66 ஆவது சுதந்திர தின விழா - 2014 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதியன்று கொண்டாடப்படவுள்ள 66 ஆவது சுதந்திர தின விழாவுக்கு உரியதான நிகழ்ச்சித் திட்டங்களை வகுத்து தேவையான நடவடிக்கைகளை ஒழுங்கமைப்பதற்கும் நெறிப்படுத்துவதற்கும் புத்தசாசன, மத அலுவல்கள் அமைச்சராகிய பிரதம அமைச்சர் மாண்புமிகு டீ.எம்.ஜயரத்ன அவர்களின் தலைமைத்துவத்தின் கீழ் பொது நிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் உட்பட ஏழு (07) அமைச்சர்களைக் கொண்டதும் சப்ரகமுவ மாகாண முதலமைச்சரையும் பிரதி அமைச்சர் ஒருவரையும் கொண்ட அமைச்சரவை உபகுழுவொன்றை நியமிப்பதற்கும் இந்த அமைச்சரவை உபகுழுவின் செயலாளராக பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சின் செயலாளர் செயலாற்றுவதற்குமாக பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு டபிள்யு.டீ.ஜே.செனெவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |