2013-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கடவுச்சீட்டு விநியோகிக்கும் செயற்பாட்டில் ஆயளவை முறையை அறிமுகப்படுத்துதல் - இந்தக் கருத்திட்டத்தின் மூலம் விரல் அடையாளத்தை அறிமுகப்படுத்தும் தன்னியக்க முறைமையொன்றை தாபிப்பதன் மூலம் கடவுச்சீட்டுகளின் பாதுகாப்பை அதிகரிப்பதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்தக் கருத்திட்டத்திற்கு மதிப்பிடப்பட்டுள்ள மொத்த செலவினம் 679.7 மில்லியன் ரூபாவாகும் என்பதுடன் இதில் 629.7 மில்லியன் ரூபாவை குடிவரவு குடியகல்வுத் திணைக்களத்துடன் இணைந்து கருத்திட்டத்தின் முகாமைத்துவ கொள்வனவு விடயங்கள் தொடர்பில் பொறுப்பு வாய்ந்த இடம்பெயர்ந் தமைக்கான சருவதேச அமைப்பு (IOM) ஊடாக அவுஸ்ரேலியா அரசினால் வழங்கப்படுகின்ற கொடையின் மூலம் வழங்கப்படுகின்றது. இந்தக் கருத்திட்டத்தின் தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கு பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராகிய அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |