• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-29 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
திறமுறை நகர அபிவிருத்திக் கருத்திட்டம்
- பிரேரிக்கப்பட்ட கருத்திட்டத்தின் ஆரம்பக் கட்டம் காலி மற்றும் கண்டி நகரங்கள் சார்ந்தவாறு நடைமுறைப்படுத்தப்படுகின்றது. தெரிவு செய்யப்பட்ட நகரங்களும் அது சார்ந்த பிரதேசங்கள், தொழில்வாய்ப்புகளை உருவாக்குவதற்கும் விருத்தி செய்வதற்கும் திட்டமிடப்பட்ட பொருளாதார மாற்றங்களைச் செய்வதற்கு இயலுமான பிரதான வலய பொருளாதார மத்திய நிலையமாக உருவாக்குவதற்கு திட்டமிடல், நிருமாணித்தல் அபிவிருத்திக்கு அரசாங்கம் இந்த நகர அபிவிருத்தி நிகழ்ச்சித்திட்டத்திற்கு உலக வங்கியின் நிதியுதவி கிடைக்கும். 200 மில்லியன் அமெரிக்க டொலர் செலவில் இந்தக் கருத்திட்டம் 2013 ஆம் ஆண்டு ஆரம்பிக்கப்படவுள்ளதுடன் மூன்று (03) வருடகாலத்திற்குள் முடிவுறுத்தப்படவும் உள்ளது. இந்தக் கருத்திட்டத்தின் பிரதான பகுதிகளாவன:

* பெரும்பாகக் கண்டி மற்றும் காலி நகரங்களின் நகர மத்தியிலும் அதற்கண்மித்த உள்ளூராட்சி பிரதேசங்களின் உட்கட்டமைப்பு வசதிகளையும் சேவைகளையும் மேம்படுத்துதலும்;
* இந்த இரண்டு நகரத்திலும் மோட்டார் வாகன போக்குவரத்துத் திட்டங்களையும் மேம்படுத்துதலும்;
* இந்த இரண்டு நகரத்திலும் மோட்டார் வாகன போக்குவரத்துகளை இலகுபடுத்துவதற்கு நகர வீதி முறைமையை மேம்படுத்துதலும்;
* வடிகாலமைப்பு மற்றும் திண்மக்கழிவு முகாமைத்துவ முறைமையை மேம்படுத்துவதன் மூலம் நகர மக்களுக்கு நன்மைகளை வழங்குவதுமாகும்;

இந்தக் கருத்திட்டத்தின் தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கு பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராகிய அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.