• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2013 ஒக்ரோபர் மாதம் 21 ஆம் திகதியிலிருந்து 24 ஆம் திகதி வரை நடாத்துவதற்குள்ள துப்புரவேற்பாடு பற்றிய 5 ஆவது தெற்காசிய மாநாடு (SACOSAN - V)
- இந்த மாநாடு 2013 ஒக்ரோபர் மாதம் 21 ஆம் திகதியிலிருந்து 24 ஆம் திகதி வரை நேபாளத்தில் நடாத்தப்படவுள்ளதுடன், இதில் நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர்; சுகாதார அமைச்சர்; கல்வி அமைச்சர் மற்றும் அரசாங்க உத்தியோகத்தர்கள் கலந்து கொள்ளவுள்ளனர். இலங்கை உட்பட பாகிஸ்தான், இந்தியா, நேபாளம், பங்களாதேசம், பூட்டான், மாலைதீவு, ஆப்கானிஸ்தான் போன்ற தெற்காசிய வலய நாடுகளின் சிவில் சமூகத்தின் தனியார் துறை நிறுவனங்கள், கல்விமான்கள் மற்றும் பாடசாலை மாணவர்கள் ஆகியோர்களை பிரதிநிதித்துவப்படுத்தி பலரும் இந்த சருவதேச மாநாட்டில் கலந்துகொள்ளவுள்ளனர். இது தொடர்பில் நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட மேலே குறிப்பிடப்பட்டுள்ள தகவல்கள் அமைச்சரவையினால் கவனத்திற்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.