2013-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசுக்கும் மாலைதீவுக் குடியரசுக்கும் இடையிலான கல்வி துறையின் ஒத்துழைப்புத் தொடர்பான புரிந்துணர்வு உடன்படிக்கை - பிரேரிக்கப்பட்டுள்ள இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையானது தேசிய அபிவிருத்திக்கு கல்வித்துறை மற்றும் பயிற்சியளித்தலில் உள்ள முக்கியத்துவம் ஏற்றுக் கொள்ளப்பட்டுள்ளதோடு, இது இருநாட்டு மக்களுக்கிடையேயான நட்புறவு மேலும் விருத்தியடையும் வழிவகையாகவும் முக்கியத்துவம் பெறுகின்றது. மேலே குறிப்பிடப்பட்டுள்ள புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கு உயர் கல்வி அமைச்சர் மாண்புமிகு எஸ்.பீ.திசாநாயக்க அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |