• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-22 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வேரஸ் கங்கை மழைநீர் வடிகாலமைப்பு, சுற்றாடல் மேம்படுத்தல் கருத்திட்டம்
- இந்தக் கருத்திட்டம் நுகேகொட, ரத்தனபிட்டிய, பொரலஸ்கமுவ, மஹஎல, இரத்மலானை போன்ற பிரதேசங்களில் தொடர்ச்சியாக ஏற்படுகின்ற வௌ்ளப்பெருக்கைக் கட்டுப்படுத்துவதற்கான பாரிய திட்டமொன்றை தயாரிப்பதற்காக இலங்கை காணி, மீட்பு அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்துடன் இணைந்து யப்பான் சருவதேச ஒத்துழைப்பு நிறுவனத்தின் (JICA) மூலம் மேற்கொள்ளப்பட்ட நீரியியல் ஆய்வை அடிப்படையாகக் கொண்டு இலங்கை காணி, மீட்பு அபிவிருத்திக் கூட்டுத்தாபனத்தினால் தயாரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதன் மூலம் வேரஸ் கங்கை ஆற்றுப்படுகையில் தொடர்ச்சியாக ஏற்படுகின்ற வௌ்ளப்பெருக்கு குறைவடைவதோடு, இயைபுள்ள பிரதேசங்களில் சுற்றுலாத்துறையை மேம்படுத்தி நிலையான அபிவிருத்திப் பணிகளின் விருத்தியும் சுற்றாடல் அறிவும் விஸ்தரிக்கப்படும். கருத்திட்டத்தின் மொத்த செலவினம் 14,227 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளதுடன், இது நான்கு (04) வருடங்களுக்குள் பூர்த்தி செய்யப்படவுள்ளது. இந்த விடயம் தொடர்பில் கடன் தொகையொன்றை பெற்றுக் கொள்வதற்கான தொடர் நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராகிய அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.