2013-08-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அதிமேதகைய ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்களின் சீசல்ஸ்சிற்கான இராஜாங்க விஜயம் - 2013 யூன் 29 - 2013 யூலை 31 - செய்து கொள்ளப்பட்ட உடன்படிக்கைகளுக்கும் / புரிந்துணர்வு உடன்படிக்கைகளுக்குமான தழுவு அங்கீகாரம் - அதிதேதகைய சனாதிபதி அவர்கள் அண்மையில் சீசல்ஸ் நாட்டிற்கான இராஜாங்க விஜயம் தொடர்பிலான தகவல்களை வெளிவிவகார அமைச்சர் மாண்புமிகு (பேராசிரியர்) ஜீ.எல்.பீரிஸ் அவர்களினால் அமைச்சரவைக்குச் சமர்ப்பிக்கப்பட்டதுடன் இந்த விஜயத்தின் போது இரண்டு நாடுகளுக்குமிடையே கைச்சாத்திடப்பட்ட உடன்படிக்கைகளுக்கு புரிந்துணர்வு உடன்படிக்கைகளுக்கு அமைச்சரவையினால் தழுவு அங்கீகாரம் வழங்கப்பட்டது. இருதரப்பு விமான சேவைகள், தொழிற்பயிற்சிகள் மற்றும் இளைஞர் அபிவிருத்தித்துறைகளில் கைச்சாத்திட்ட உடன்படிக்கைகளுக்கும் புரிந்துணர்வு உடன்படிக்கைகளுக்கும் இருநாட்டு தலைவர்களினாலும் பாராட்டப்பட்டது. இருநாடுகளுக்குமிடையிலேயான கல்வி, கடற்றொழில், சந்தைப்படுத்தலும் முதலீடும், நீதிமன்றமும் சுகாதாரத்துறையும் போன்ற விரிவானதும் மிகவும் வலுவுள்ளதுமான ஒத்துழைப்பை இருநாட்டுத் தலைவர்களாலும் மெச்சப்பட்டது. |