• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பெரும்பாக கொழும்பு பிரதேசத்தின் நீர் மற்றும் கழிவு நீர் முகாமைத்துவ அபிவிருத்தி நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவி
- நான்கு கட்டங்களைக் கொண்டுள்ள இந்த நிகழ்ச்சித் திட்டத்திற்கு 300 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர் நிதியுதவியை வழங்குவதற்கு ஆசிய அபிவிருத் வங்கி ஒத்துக் கொண்டுள்ளது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தின் நோக்கமானது பெரும்பாகக் கொழும்பு நகரின் குடிநீர் வழங்களின் வினைத்திறனை மேம்படுத்துவதாகும். இந்தக் கருத்திட்டத்தின் இரண்டு கட்டங்கள் 2012 ஆம் ஆண்டு தொடக்கம் 2018 ஆம் ஆண்டுக் காலப்பகுதிக்குள் நடைமுறைப்படுத்தப்பட்டு முடிவுறுத்துவதற்கு எதிர்பார்க்கப்படுகின்றது. இந்த நிகழ்ச்சித் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிதேகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.