2013-08-15 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உலக வங்கியின் உதவியுடன் இரண்டாவது சுகாதார துறை அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் - சருவதேச அபிவிருத்தி சங்கத்தினால் வழங்கப்படும் 200 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்களை பயன்படுத்தி 2013 ஆம் ஆண்டிலிருந்து 2017 ஆம் ஆண்டு வரை ஐந்து (05) வருட காலத்திறக்குள் தேசிய மற்றும் மாகாண மட்டத்தில் இரண்டாவது சுகாதாரத்துறை அபிவிருத்திக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |