2013-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இந்திய அரசாங்கத்தின் புடவைக் கைத்தொழில் அமைச்சும் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின் கைத்தொழில், வர்த்தக அலுவல்கள் அமைச்சும் இணைந்து சிறிய மற்றும் நடுத்தர அளவுலான கைத்தறி, மின்பொறிமுறை மற்றும் புடவைக் கைத்தொழில் தொழில்முயற்சி யாளர்களை மேம்படுத்துவதற்கான புரிந்துணர்வு ஒப்பந்த மொன்றைச் செய்து கொள்ளல் - சிறிய மற்றும் நடுத்தர அளவிலான கைத்தறி, மின்பொறிமுறை மற்றும் புடவைத்தொழில் தொழில்முயற்சியாளர்களை அபிவிருத்தி செய்வதற்காக வர்த்தக வாய்ப்புகளை வழங்குவதும் ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதும் இந்த புரிந்துணர்வு உடன்படிக்கையின் நோக்கமாகும். இருதரப்பினரும் இணைந்து வரைந்துள்ள இந்த புரிந்துணர்வு உடன்படிக்கை அது கைச்சாத்திடப்பட்ட திகதியிலிருந்து ஐந்து (05) வருட காலத்திற்கு செயல் வலுவிலிருக்கும் என்பதோடு, ஐந்து (05) வருடங்களுக்கு ஒரு தடவை புதுப்பிக்கப்படுதல் வேண்டும். மேற்போந்த புரிந்துணர்வு உடன்படிக்கையில் கைச்சாத்திடுவதற்கும் இயைபுள்ள நோக்கங்களை நிறைவேற்றுவதற்கும் கைத்தொழில், வர்த்தக அலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு அப்துல் றிஷாத் பதியுதீன் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |