• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
ஆசிய விளைவுப் பெருக்க அமைப்பின் 2013 ஆம் ஆண்டிற்குரியதாக இலங்கையில் நடாத்தப்படும் இரண்டாவது செயலமர்வு பற்றி அமைச்சரவைக்கு அறியச் செய்தல்
- கைத்தொழில் மற்றும் கமத்தொழில் துறைகளின் விளைவு பெருக்கத்தை மேம்படுத்தும் பொருட்டு அதன் உறுப்பு நாடுகளுக்கு ஒத்தாசை நல்கும் ஆசிய விளைவு பெருக்க அமைப்பு யப்பானை கேந்திர நிலையமாக கொண்ட சர்வதேச அமைப்பொன்றாகும். இலங்கை உட்பட ஆசிய பசுபிக் வலய நாடுகள் 20 ஏற்கனவே இதில் உறுப்பாபண்மையை பெற்றுக் ​கொண்டுள்ளன. 2013 ஆம் ஆண்டில் இலங்கையில் நடாத்தப்படவுள்ள இரண்டு செயலமர்வுகளில் முதலாவது 2013 யூன் மாதம் 03 ஆம் திகதியிலிருந்து 07 ஆம் திகதிவரை நடாத்தப்பட்டதோடு, இதில் இரண்டாவது காலநிலை மாற்றங்களைக் குறைத்துக் கொள்ளும் பொருட்டு கமத்திட்டங்களின் அபிவிருத்தி என்னும் தொனிப்பொருளில் 2013ஆகஸ்ட் மாதம் 26 ஆம் திகதியிலிருந்து 30 ஆம் திகதிவரை இலங்கையில் நடாத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. இந்த இரண்டாவது செயலமர்வுக்கு உரியதான தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக கமத்தொழில் அமைச்சர் மாண்புமிகு மஹிந்த யாப்பா அபேவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.