2013-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
மாளிகாவில புத்தர் சிலைக்கு பாதுகாப்பு கூரையொன்றை நிருமாணித்தல் - புத்தள நகரத்திலிருந்து 15 கிலோ மீற்றர் தூரத்திலுள்ள மாளிகாவில புத்தர் சிலைக்கு மத்திய கலாசார நிதியத்தின் மூலம் அமைச்சுக்கு வழங்கப்படும் 15 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி நிலையான பாதுகாப்பு கூரையொன்றை நிருமாணிப்பதற்காக தேசிய மரபுரிமைகள் அமைச்சர் மாண்புமிகு (கலாநிதி) ஜகத் பாலசூரிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |