• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
“தெயட்ட கிருள” - 2014 தேசிய கண்காட்சி - குருநாகல், புத்தளம் மாவட்டங்களில் E - ஆய்வு கூடங்களை நிறுவுதல்
- 2014 “தெயட்ட கிருள” தேசிய அபிவிருத்தி நிகழ்ச்சித்ததிட்டத்திற்கும் கண்காட்சிக்கும் ஒருங்கிணைவாக குருநாகல், புத்தளம் மாவட்டங்களில் முறையே 75 மற்றும் 50 E - ஆய்வு கூடங்களை நிருமாணிப்பதற்கு தொலைத்தொடர்புகள், தகவல் தொழினுட்ப அமைச்சினால் தீர்மானிக்கப்பட்டுள்ளது. இந்த E - ஆய்வு கூடங்கிளிலிந்து 2013 ஆம் ஆண்டில் குருநாகல் மாவட்டத்தில் 25உம் புத்தளம் மாவட்டத்தில் 15 உமாக நிருமாணிக்கப்படுவதோடு, மீதி 85 E - ஆய்வு கூடங்களும் 2014 ஆம் ஆண்டில் நிருமாணிக்கப்படவுள்ளது. 168 மில்லியன் ரூபாவைக் கொண்ட செலவினத்தின் மீது மேற்போந்த நிருமாணிப்புப் பணிகளை நடாத்திச் செல்வதற்காக தொலைத்தொடர்புகள், தகவல் தொழினுட்ப அமைச்சர் மாண்புமிகு ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.