• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
மாத்தறை மாவட்டத்தில் நிறுவுவதற்குப் பிரேரிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக கல்லூரிக்கு பொருத்தமான காணியொன்றைப் பெற்றுக் கொள்தல்
- பல்கலைக்கழக கல்லூரிகளைத் தாபிக்கும் நோக்கமாவது தேசிய ரீதியில் தொழிற்தகைமைகளுடன் கூடிய டிப்ளோமா மட்ட பாடநெறிகளுக்கு ஆட்சேர்ப்புச் செய்யப்படும் மாணவர்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கும் கைத்தொழில் துறையின் கேள்வியை ஈடுசெய்வதற்கும் நடுத்தர மட்டத்திலான தொழிநுட்பவியளர்களை உருவாக்குவதற்கும் ஆகும். பிரேரிக்கப்பட்டுள்ள பல்கலைக்கழக கல்லூரிகள் 2014 சனவரி மாதத்திலிருந்து ஆரம்பிக்கப்படவுள்ளன. இதில் பல்கலைக்கழக கல்லூரியொன்று கூட்டுறவு, உள்நாட்டு வியாபார அமைச்சின் கீழுள்ள உணவுத் திணைக்களத்திற்குச் சொந்தமான மாத்தறை மெத்தவத்தயிலுள்ள காணியில் நிறுவுவதற்கு எதிர்பார்க்க்பபடுகின்றது. இந்த விடயம் சம்பந்தமான தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்காக இளைஞர் அலுவல்கள் மற்றும் திறன்கள் அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு டலஸ் அழகப்பெரும அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.