• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வீரவில மாதிரி பனை பண்ணை - ஏற்றுமதி உற்பத்தி கிராமத்திற்காக மொத்தக் காணியிலிருந்து ஒரு பகுதியை விடுவித்தல்
- அம்பாந்தோட்டை மாவட்டத்திலுள்ள சுமார் 23 ஏக்கர் விஸ்தீரணமுடைய குறித்த காணியில் பனை அபிவிருத்திச் சபையினால் மாதிரி பனை பண்ணையொன்று தாபிக்கப்பட்டுள்ளது. இந்தக் காணிக்கு அண்மையிலுள்ள கிராமங்களில் வசிக்கும் பெரும் எண்ணிக்கையிலான பெண்களுக்கு தொழில் வாய்ப்பு வழங்கியுள்ள அம்பாந்தோட்டை அபிவிருத்தி ஆதார மன்றத்தின் கீழ் இயங்கும் ஏற்றுமதி உற்பத்திக் கிராமத்திற்கு இந்தக் காணியிலிருந்து அரைவாசியை மரக்கறி மற்றும் பழவகை செய்கைக்காக வழங்கும் பொருட்டு பாரம்பரிய கைத்தொழில்கள், சிறுதொழில் முயற்சி அபிவிருத்தி அமைச்சர் மாண்புமிகு டக்ளஸ் தேவானந்தா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.