• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-08-01 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பாணந்துறை "காளவத்த" காணியை அபிவிருத்தி செய்தல்
- பாணந்துறை நகரம் களுத்துறை மாவட்டத்திலுள்ள முக்கிய வர்த்தக மற்றும் சேவை வழங்கும் கேந்திர நிலையமாகும். பாணந்துறை நகர மத்தியின் நுழைவாயிலில் உள்ள "காளவத்த" காணி பொது சதுக்கமொன்றாக அபிவிருத்தி செய்வதற்கு பிரேரிக்கப்பட்டுள்ளது. இதன் போது இடம்பெயரும் குடும்பங்களையும் 35 வர்த்தக அலகுககளையும் மீள அமர்த்துவதற்கு 2013 ஆம் ஆண்டில் குறித்தொதுக்கப்பட்டுள்ள 25 மில்லியன் ரூபாவை பயன்படுத்தி கருத்திட்டத்தின் தொடக்கப்பணிகளை ஆரம்பிப்பதற்கும் 2014 ஆம் ஆண்டில் வழங்கப்படவுள்ள 40 மில்லியன் ரூபாவைக் கொண்ட மீதி நிதி ஏற்பாட்டின் மூலம் கருத்திட்டத்தின் பணிகளை பூர்த்தி செய்வதற்கும் பாதுகாப்பு, நகர அபிவிருத்தி அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.