• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-18 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
பதுளை மாவட்டத்தின் மொரான நீர்த்தேக்கத்தின் பிரதான நிருமாணிப்பு ஒப்பந்தத்தை மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியத்திற்கு கையளித்தல்
- இந்த கருத்திட்டத்தின் கீழ் உள்ஹிட்டிய ஓயாவுக்குக் குறுக்காக அணை ஒன்றை நிருமாணித்து, கால்வாய் ஊடாக ரொட்டகொல்ல நீர்த்தேக்கத்திற்கு நீரைக் கொண்டு செல்வதற்கும் இரு போகங்களின் போது கடும் நீர் பற்றாக்குறைக்கு முகம் கொடுக்கும் நீர்ப்பாசன திணைக்களத்தின் கீழ் நிருவகிக்கப்படும் பிரதான நீர்பாசன திட்டமொன்றான நாகதீப திட்டத்தின் நீர்விநியோகத்தை அதிகரிப்பதற்கும் பிரேரிக்கப்பட்டுள்ளது. இந்தக் கருத் திட்டத்தின் மொத்த செலவினம் 1,760 மில்லியன் ரூபாவென மதிப்பிடப்பட்டுள்ளதோடு, கருத்திட்டத்தின் பணிகளை ஆரம்பிக்கும் பொருட்டு 2013 ஆம் ஆண்டில் 300 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதி ஏற்பாடு குறித்தொதுக்கப்பட்டுள்ளது. அமைச்சரவையினால் நியமனம் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவின் சிபாரிசுக்கு அமைவாக மேற்போந்த நிருமாணிப்பை மத்திய பொறியியல் உசாத்துணைப் பணியகத்திற்கு வழங்குவதற்காக நீர்ப்பாசன, நீர்வள முகாமைத்துவ அமைச்சசர் மாண்புமிகு நிமல் சிறிபால த சில்வா அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.