• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
தெற்கு வீதி இணைப்புக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கான ஆசிய அபிவிருத்தி வங்கியின் நிதியுதவி
- தெற்கு கடுகதி வீதியின் ஐந்து நுழைவாயில்களை அபிவிருத்தி செய்யும் பொருட்டு ஆசிய அபிவிருத்தி வங்கியிடமிருந்து 75 மில்லியன் ஐக்கிய அமெரிக்க டொலர்கள் (அண்ணளவாக 9.6 பில்லியன் ரூபா) கொண்ட கடன் தொகையொன்று பெறப்படவுள்ளது. இதற்கு மேலதிகமாக இந்தக் கருத்திட்டத்தின் கீழ் தெற்குக் கடுகதி வீதியின் இடைப்பரிமாற்ற இடங்கள் மூன்றுக்கு இணைக்கப்படும் பின்வரும் ஐந்து நெடுஞ்சாலைகளின் 33.5 கிலோ மீற்றர்கள் அபிவிருத்தி செய்யப்படும்:

* மொறட்டுவை - பிலியந்தலை - 2.5 கி.மீ
* இரத்மலானை - மிரிஹான - 2.1 கி.மீ
* தெற்கு கடுகதி வீதி - மத்துகம - 12.4 கி.மீ
* கிருலப்பனை - ஹோமாகம - 2.1 கி.மீ
* கெஸ்பாவ - பொக்குனுவிற்ற - 14.4 கி.மீ

நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.