• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
2014 தெயட்ட கிருல தேசிய கண்காட்சி
- 2014 பெப்ரவரி மாதம் 04 ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ள இந்த கண்காட்சி வயம்ப பல்கலைக்கழகம், தொழினுட்ப கல்லூரி, குளியாபிட்டிய மத்திய மகாவித்தியாலயம் ஆகியவற்றின் மனையிடங்களில் நடாத்தப்படவுள்ளது. கண்காட்சியின் பின்னர் இந்த கல்வி நிறுவனங்களினால் அவற்றின் தேவைகளுக்காக பயன்படுத்தக்கூடிய விதத்தில் கண்காட்சி மனையிடத்தின் தேவைகளுக்கு ஏற்றவாறு நிரந்தரக் கட்டடங்கள் இந்த மனையிடங்களில் நிருமாணிக்கப்படவுள்ளன. ஏனைய அரசாங்க நிறுவனங்களுடன் இணைந்து உரிய பணிகளை நிறைவேற்றுவதற்காக தொலைத்தொடர்புகள் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சர் மாண்புமிகு ரஞ்சித் சியம்பலாபிட்டிய அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.