2013-07-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசாங்க பாடசாலைகளைச் சேர்ந்த மாணவ மாணவிகளினதும் ஆசிரியர்களினதும் பங்களிப்புடன் “செனெஹசக்க தொட்டுபொல” என்னும் பெயரில் ஆனையிறவு புகையிரத நிலையத்தை நிருமாணித்தல் - கல்வி அமைச்சின் வழிநடத்தலின் கீழ் இலங்கையின் மொத்த ஆசிரியர் மற்றும் மாணவ மாணவிகளினால் செய்யப்பட்ட நன்கொடையான 15.5 மில்லியன் ரூபாவைக் கொண்ட நிதியைப் பயன்படுத்தி போக்குவரத்து அமைச்சின் உடன்பாட்டின் மீது பிரயாணிகள் மேடை, பிரயாணிகள் ஓய்வு அறை, சிற்றுண்டிச்சாலை ஆகியவற்றைக் கொண்ட ஆனையிறவு புகையிரத நிலையத்தை நிருமாணிப்பதற்காக கல்வி அமைச்சர் மாண்புமிகு பந்துல குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |