2013-07-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
உள்நாட்டு ஒப்பந்தக்கார்கள் மூலமாக தேசிய நெடுஞ்சாலைகளின் புனரமைப்பிற்காக உள்நாட்டு வங்கிகளினால் நிதியளிக்கப்படும் நிகழ்ச்சித் திட்டம் - கட்டம் 2 இன் கீழ் ஐந்து (05) ஒப்பந்தங்களை வழங்குவதற்கு அங்கீகாரம் கோரல் - உள்நாட்டு வங்கிகளின் மூலம் வழங்கப்படும் நிதியங்களைப் பயன்படுத்தி அமைச்சரவையினால் நியமனஞ் செய்யப்பட்ட நிலையியல் கொள்வனவுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு உள்நாட்டு ஒப்பந்தக்காரர்களினூடாக பின்வரும் நெடுஞ்சாலைகளை / பாலங்களை புனரமைக்கும் பொருட்டு துறைமுகங்கள், நெடுஞ்சாலைகள் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. : * அம்பாந்தோட்டை நகர கேந்திர அபிவிருத்திக் கருத்திட்டம் - மிரிஜ்ஜவில - சூரியவெவ வீதி - 23.3 கிலோ மீற்றர் மற்றும் சுற்று வட்டவீதி - 6.6 கிலோ மீற்றர்; * லுணுகம்வெகர - கதிர்காமம் வீதி 13.82 கிலோ மீற்றர்; * குருநாகல் - நாரம்மல - மாதம்பை வீதி - 40.87 கிலோ மீற்றரிலிருந்து 64.77 கிலோ மீற்றர் வரை; * கடிஹாவ பிரதேசத்தில் தெதுறுஓயாவுக்கு குறுக்காக இரட்டைப் பாதைப் பாலங்களை நிருமாணித்தல் ; அத்துடன் * கடவெலகெதர - வித்திக்குலிய வீதி - 14 கிலோ மீற்றர். |