2013-07-11 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கிளிநொச்சி மற்றும் முல்லைத்தீவு மாவட்டங்களில் 4 புதிய தேசிய பாடசாலைகளைத் தாபித்தல் - கிளிநொச்சி மாவட்டத்தில் உள்ள கிளிநொச்சி மத்திய மகா வித்தியாலயத்தையும் முழங்காவில் மத்திய மகா வித்தியாலயத்தையும் முல்லைத்தீவு மாவட்டத்தில் உள்ள வித்தியானந்த வித்தியாலயத்தையும் மு/மல்லாவி மத்திய மகா வித்தியாலயத்தையும் தேசிய பாடசாலைகளாகத் தரமுயர்த்துவதற்கும் இந்த பாடசாலைகளை 1,000 இடைநிலைப் பாடசாலைகளை அபிவிருத்தி செய்யும் நிகழ்ச்சித் திட்டத்தில் சேர்ப்பதன் மூலம் அபிவிருத்தி செய்வதற்கும் கல்வி அமைச்சர் மாண்புமிகு பந்துல குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |