• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
நெற் சந்தைப்படுத்தல் சபையின் மேலதிக நெல் தொகைகளின் ஏற்றுமதியை மீள ஆரம்பித்தல்
- 2013 யூலை மாதம் முடிவடையும் போது சிறுபோகத்தின் மொத்த விளைச்சலிலிருந்து 75,000 மெ.தொன் முதல் 100,000 மெ.தொன் வரை கொள்வனவு செய்வதற்கு நெற்சந்தைப்படுத்தும் சபை எதிர்பார்க்கின்றது. இதற்குத் தேவையான களஞ்சிய வசதிகளை வழங்கும் நோக்கில் தற்பொழுது களஞ்சியப்படுத்தப்பட்டுள்ள நெற்தொகைகளிலிருந்து 50,000 மெற்றிக் தொன்னை பாதுகாப்புக் கையிருப்பாக வைத்துக் கொண்டதன் பின்னர், 50,000 மெ.தொ. நெல்லை அரிசியாக வெளிநாடுகளுக்கு விற்பனை செய்வதற்கு கூட்டுறவு, உள்நாட்டு வியாபார அமைச்சர் மாண்புமிகு ஜொன்ஸ்ரன் பெர்னாண்டோ அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.