2013-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
கிரம - கட்டுவன ஒருங்கிணைந்த நீர்வழங்கல் கருத்திட்டத்தை நடைமுறைப் படுத்துதல் - அம்பாந்தோட்டை மாவட்டத்தில் அமைந்துள்ள இந்தக் கருத்திட்டத்தின் மூலம் உள்வாங்கப்படுகின்ற பிரதேசங்கள் கட்டுவன மற்றும் வலஸ்முல்ல பிரதேச செயலாளர் பிரிவுகளுக்கு உரித்தான 34 கிராம உத்தியோகத்தர்கள் பிரிவுகளைக் கொண்டதாகும். மேற்போந்த கருத்திட்டத்தின் ஒப்பந்தங்களை அமைச்சரவையினால் நியமிக்கப்பட்ட நிலையியல் மீளாய்வுக் குழுவினால் சிபாரிசு செய்யப்பட்டுள்ளவாறு 11,139.931.64 யூரோக்களைக் கொண்ட தொகைக்கு வழங்குவதற்கும் கருத்திட்டத்தின் உள்நாட்டு நிதியத்தின் தேவைப்பாடுகளுக்கான நிதியேற்பாடுகளை குறித்தொதுக்குமாறு பொது திறைசேரியிடம் கோரிக்கை விடுப்பதற்கு நீர் வழங்கல், வடிகாலமைப்பு அமைச்சர் மாண்புமிகு தினேஷ் குணவர்த்தன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |