2013-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
ஜேர்மனியின் KFW வங்கியிலிருந்து 28 மில்லியன் யூரோக்களைக் கொண்ட நிதி ஒத்துழைப்புடன் சுகாதார அமைச்சினால் காலியில் புதிய பிரசவ மருத்துவமனை நிருமாணிப்புக் கருத்திட்டத்தை நடைமுறைப்படுத்துதல் - காலி பிரசவ மருத்துவமனை மன்றத்தினால் 2004 திசெம்பர் மாதம் ஏற்பட்ட ஆழிப்பேரலை அனர்த்தத்தின் பின்னர் இலங்கையின் தென்மேற்கு கரையோரத்தில் அமைந்துள்ள காலி நகரத்தில் புதிய பிரசவ மருத்துவமனை யொன்றை நிருமாணிப்பதற்கான பணிகள் ஆரம்பிக்கப்பட்டது. ஜேர்மனியின் KFW வங்கியினால் வழங்கப்படுகின்ற 28 மில்லியன் யூரோக்களைக் கொண்ட நிதி ஒத்துழைப்புடன் மேற்போந்த கருத்திட்டத்தின் நடவடிக்கைகளை நிறைவேற்றுவதற்கு சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |