• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-07-04 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் இணைக்கப்பட்டவர்களுக்கு சுயதொழில் கடன் வசதிகளை வழங்கும் இரண்டாம் கட்ட நடவடிக்கைகளை நடைமுறைப்படுத்துதல்
- வடக்கு கிழக்கு மாகாணங்களில் நிலவிய மோதல் நிலைமைகள் இல்லாதொழிந்ததன் பின்னர் புனர்வாழ்வளிக்கப்பட்டு சமூகத்தில் மீள இணைக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை தற்போது 11,573 ஆகும். வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் 1,579 பயனாளிகளுக்கு சுயதொழில் நோக்கங்களுக்காக அரசாங்க வங்கிகளின் ஊடாக 300 மில்லியன் ரூபா கடன் வசதிகளை வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இவ்வாறு புனர்வாழ்வளிக்கப்பட்டுள்ள மேலும் 4,724 பேர்களுக்கு கடன்வசதிகளை வழங்குவதற்காக 525 மில்லியன் ரூபாவை வழங்குவதற்கு புனர்வாழ்வளிப்பு, சிறைச்சாலைகள் மறுசீரமைப்பு அமைச்சர் மாண்புமிகு சந்திரசிறி கஜதீர அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.