• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
வெளிநாட்டவர்களுக்குக் காணி கைமாற்றல்
வெளிநாட்டவர்களுக்குக் காணி கைமாற்றல் தொடர்பில் வரையறைகளை மேற்கொள்ளும் பொருட்டு சட்டங்களை ஆக்குமாறு சட்டவரைநருக்கு பணிப்புவிடுக்கும் பொருட்டு நிதி, திட்டமிடல் அமைச்சராக அதிமேதகைய சனாதிபதி அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது: பிரேரிக்கப்பட்டுள்ள சட்டமூலத்தில் பின்வரும் விசேட விடயங்கள் உள்ளடக்கப்பட்டுள்ளன: (I) பிரேரிக்கப்பட்ட சட்டத்தின் பிரகாரம், விடுவிப்புக்கள் வழங்கப்பட்டாலன்றி இலங்கை பிரசையல்லாத அல்லது இலங்கையில் கூட்டிணைக்கப்பட்ட 50 சதவீதம் அல்லது அதற்குக் கூடுதலான அளவில் உள்நாட்டுப் பங்குதாரர்களைக் கொண்ட உள்நாட்டு கம்பனியொன்று அல்லது வெளிநாட்டுக் கம்பனியொன்றுக்கு உறுதியொன்றின் மூலம் கொடையொன்றின் மூலம் அல்லது நன்கொடையொன்றின் மூலம் எந்தவிதத்திலாயினும் உடைமைமாற்றத்தின் மூலம் அரசாங்க அல்லது தனியார் காணிகளை கைமாற்றம் செய்வது தடைசெய்யப்பட்டுள்ளது; (II) இயைபுள்ள நியதிகளுக்கு உட்பட்டு, அரசாங்க அல்லது தனியார் காணிகளை மேலே (I) இல் குறிப்பிடப்பட்டுள்ள ஆட்களுக்கு நேரடியாக விற்பனை செய்யாமல் உச்சமாக 99 வருட காலப் பகுதிக்கு குத்தகைக்களிக்கலாம்.