2013-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
இரத்தினபுரி மாவட்ட செயலகத்திற்கு புதிய மூன்று (03) மாடிக் கட்டடமொன்றை நிருமாணித்தல் 2013 ஆம் ஆண்டுக்கு ஒதுக்கப்பட்டுள்ள நிதியேற்பாடுகளை உபயோகப்படுத்திக் கொண்டு மேற்போந்த கருத்திட்டத்தின் அடிப்படை வேலைகளை ஆரம்பிப்பதற்கும் 2014 - 2016 ஆம் ஆண்டின் நடுத் தவணைக்கால வரவுசெலவுத்திட்டக் கட்டமைப்புக்குள் வழங்குவதற்குள்ள நிதியங்களின் மூலம் கருத்திட்டத்தின் மீதி வேலைகளை நிறைவேற்றுவதற்கும் மேற்போந்த ஒப்பந்தத்தை போட்டி கேள்வி மூலம் வழங்குவதற்கும் பொதுநிருவாக, உள்நாட்டலுவல்கள் அமைச்சர் மாண்புமிகு டபிள்யு.டீ.ஜே.செனெவிரத்ன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |