2013-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை |
அரசாங்க மருத்துவசாலைகளுக்கான மருந்து விநியோகத்தை செயல் திறனுடைய தாக்குதல் தெற்காசிய வலயத்தில் விசாலமானதும் நன்கு தாபிக்கப்பட்டுள்ளதுமான மருந்து பொருள் தொழிற்சாலைகள் உள்ள பங்களாதேசிலிருந்து அரசாங்க மருத்துசாலைகளுக்குத் தேவையான மருந்து வகைகளை கொள்வனவு செய்வது தொடர்பில் கலந்துரையாடப்பட்டுள்ளன. அரசாங்கத்திடமிருந்து அரசாங்கத்திற்கு என்ற பொறிமுறைக்கு உட்பட்டு, பங்களாதேஷிலிருந்து தேவையான மருந்துகளை கொள்வனவு செய்வதற்கு உரியதான தொடர் நடவடிக்கைகளை எடுப்பதற்கும் இந்தக் கொள்வனவு தொடர்பில் உள்நாட்டு பிரதிநிதியாக அரசாங்க மருந்தாக்கல் கூட்டுத்தாபனத்தை நியமிப்பதற்கும் சுகாதார அமைச்சர் மாண்புமிகு மைத்திரிபால சிறிசேன அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது. |