• Increase font size
  • Default font size
  • Decrease font size

2013-06-20 ஆம் திகதியிடப்பட்ட அமைச்சரவைத் தீர்மானத்துக்கான ஊடக அறிக்கை
இலங்கை தேசிய மிருகக்காட்சி சாலைக்கும் தென்ஆபிரிக்க குடியரசின் பிரிடோரியா மிருகக் காட்சிசாலைக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் ஒன்றைக் கைச்சாத்திடல்
இந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தின் நோக்கமானது விலங்கு வளர்ப்பு மிருகக்காட்சிச்சாலைகளின் மிருகக்கண்காட்சி சார்ந்த ஆய்வுப் பணிகள், மிருக வைத்தியர்களுக்கும் மிருகக்காட்சிச்சாலையின் நிருவாகிகளுக்குமான பயிற்சிகள் போன்ற துறைகளுக்கு ஒத்துழைப்பு வழங்குதல், கருத்துப் பரிமாற்றம் அத்துடன் உதவி வழங்குதல் ஆகியவற்றுக்கு அடிப்படையொன்றை உருவாக்குவதாகும். மேற்போந்த புரிந்துணர்வு ஒப்பந்தத்தை செய்து கொள்ளும் பொருட்டு தாவரவியல் பூங்கா, பொதுப் பொழுதுபோக்கு அமைச்சர் மாண்புமிகு ஜயரத்ன ஹேரத் அவர்களினால் சமர்ப்பிக்கப்பட்ட பிரேரிப்புக்கு அமைச்சரவையினால் அங்கீகாரம் வழங்கப்பட்டது.